Showing posts with label ஐநா சபை. Show all posts
Showing posts with label ஐநா சபை. Show all posts
உலகின் சமாதனம் என்ன என்பது இலங்கை தமிழர் விடயத்தில் நிரூபணம் ஆகின்றது.
tamils of srilanka, war, war crime, இலங்கை தமிழ், ஐநா சபை, தீர்கதரிசனம், நிரந்தர சமாதானம், ஜேசு சாமி
No comments
இந்த நூற்றாண்டில் இடம் பெற்ற மிக கொடூரமான இன அழிப்பு என்றால் இலங்கை தமிழ் இன அழிப்பை குறிப்பிடலாம். தமிழ் இன அழிப்பு இடம் பெற்ற வேளை ஐநா சபையும் இந்தியாவை ஆளும் அரசும் ஏன் உலகமே வேடிக்கை பார்த்தது. போர் முடிந்தது என இலங்கை அரசு அறிவித்ததும் அனைத்து நாடுகளும் இலங்கை அரசை புகழ்ந்ததுடன் இலங்கையில் நிரந்தர சமாதானம் நிலவுகின்றது எனவும் இலங்கை தமிழர் மிக சந்தோசமாக வாழ்கின்றனர் என கூறிவருகின்றனர் .ஆனால் அங்கோ ஐந்து தமிழருக்கு ஒரு இராணுவம் என கண்காணிக்க படுவதுடன் பல அடக்குமுறை இடம்பெற்று வருவது அனைவரும் அறிந்த உண்மை . அதானால் தான் அன்று ஜேசு கூறினார்
யோவான் 14:27 சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான்உ ங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.
இவ் வசனத்தின் இறுதில் உலகம் கொடுக்கிறபிரகாரம் நான்உங்களுக்குக் கொடுக்கிறதில்லை என்று ஜேசு அன்று கூறியது மிக சரியனதே. உலகின் சமாதனம் என்ன என்பது இலங்கை தமிழர் விடயத்தில் நிரூபணம் ஆகின்றது. எனவே சமாதானத்தின் இறைவனிடம் இலங்கை தமிழர் விடயத்தில் மறைக்க பட்ட உண்மைகள் வெளிவரவும் தமிழர்கள் மன விருப்பத்தின் படி நிலையான சமாதானம் கிடைக்க வேண்டுவோம்
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
ஜெபத்தோட்ட ஜெயக்கீதங்கள் vol 13 இல் இருந்தது
கட்டிப் பிடித்தேன் உந்தன் பாதத்தை
கண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவே
இலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்டுமே
இளைஞரெல்லாம் இயேசுவுக்காய் வாழ வேண்டுமே
இரங்கும் ஐயா மனம் இரங்குமையா
1. துப்பாக்கி ஏந்தும் கைகள்- உம்
வேதம் ஏந்த வேண்டும்
தப்பாமல் உம் விருப்பம்
எப்போதும் செய்ய வேண்டும்
2. பழிக்கு பழி வாங்கும்(எபி 10:30)
பகைமை ஒழிய வேண்டும்
மன்னிக்கும் மனப்பான்மை (எபே4:32)
தேசத்தில் மலர வேண்டும்
3. பிரிந்த குடும்பமெல்லாம்
மறுபடி இணைய வேண்டும்
பெற்றோரின் கண்ணீர் எல்லாம்
களிப்பாய் மாற வேண்டும்
4. வீடு இழந்தவர்கள்
இடங்கள் பெயர்ந்தவர்கள்
மறுவாழ்வு பெற வேண்டும்
மகிழ்ச்சியால் நிரம்ப வேண்டும்
Popular Posts
-
காயங்கள் காயங்கள் இயேசுவின் உடலில் உட்காயங்கள் வெளிகாயங்கள் இயேசுவின் உடலில் கசையடிகளும் பாய்ந்து ஓடும் இரத்தமும் இயேசுவின் உடலில் உலகத்த...
-
நம்பி வந்த மனிதர்க்கெல்லாம் நன்மைகள் ஏராளம் -- 2 நம்புகிறேன் நம்புகிறேன் நம்பத்தக்க தகப்பனே -- 2 நம்பி வந்த மனிதர்க்கெல்லாம் நன்மைகள் ஏராளம...
-
எழுந்து பெத்தேலுக்கு போ அதுதான் தகப்பன் வீடு நன்மைகள் பல செய்த நல்லவர் இயேசுவுக்கு நன்றி பாடல் பாடணும் துதி பலிபீடம் கட்டணும் ஆபத்து நாளில...
-
யூதர்கள் இயேசுவை ஏற்றுகொள்ள,அவர்கள் கண்களில் காணபடும் செதில்கள் அகற்றபட செபித்து கொள்ளுங்கள்
-
40 நாள் ஜெப யாத்திரை Perambalur District (Day 27) - 2016





